Arakku Valley (sarakku valley ) Part 2 - தனக்கு வந்தா தான் தெரியும் !!!!!

ட்ரெயின்ல நல்லா   பொழுது போச்சு. எழுந்து பல் தேச்சி ஆவலா vizag போய் சேந்தோம் . இறங்கின உடனே அங்க ஒரு ஸ்டேஷன் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுட்டு சும்மா இருக்காம மசாலா chai வேற .. அங்க ஆரம்பிச்சுது அடி வயிற்றில் ஒரு இன்ப வலி.


அவன்  அவன்  ஜாலியா  அடுத்த  destination கு  ரெடி ஆயிட்டான்  ... நான் போய் "டேய்   ரூம் எதுவும் போட வேணாமாடா?   குளியல் மத்ததுக்கு   எல்லாம்? '' (அந்த விஷயத்துல நான் கொழந்த மாதிரி )   உடனே பசங்க  ''குளியல் எல்லாம் எதுக்கு மாமா ., மத்தது எல்லாம் நாங்க ட்ரெயின்லையே  முடிச்சிடோமே .. நீங்க  போகலையா ?  ... அவுனுங்க கூட நம்மள மாதிரி பசங்க திருட  கூடாதுன்னு சங்கிலி எல்லாம் கட்டி mug வெச்சிருந்தானுங்க மாமா . வெரி comfortable  .. '' ( Comfortabla ???? என்னமோ 5  ஸ்டார் ஹோட்டல்ல ஒக்காந்த மாதிரி பெருமை வேற) அப்போ நான்தான் மாட்டினேனா ? ..டேய்ய்  இதெல்லாம்  மொதல்லையே  சொல்ல  மாட்டீங்களா? தூங்கினா என்னடா ..எழுப்ப வேண்டியதானே ?  .. சரி  வழில  பார்த்துக்கலாம்னு   முடிவு  பண்ணி  borra caves க்கு  ரெடி ஆனோம் !!!!

Caves were very slippery. Full of stalactites( ஏன்  நடுல  பீட்டர் ?..அப்போ தான் அந்த எடத்துக்கு  மதிப்பு  ) . நம்ம பசங்க மானாவாரியா சில்லறை வாரினானுங்க (வழுக்கி  வழுக்கி  ) . சில பேர் 500 Rs .. சில பேர் 1000 Rs கு கூட ... ஒரே ஜாலி தான் ..

அங்க இன்னொரு சூப்பர் மேட்டர் என்னன்னா , ஒரு சின்ன ஓட்டை வழியா உள்ள போய் வெளிய வரணும் .. ரோட்டோரமா வித்தை  காட்டுவாங்க  இல்லை ? ( குட்டி வளையத்துக்குள்ள பொண்ணு போய்ட்டு வருமே  அந்த  மாதிரி) ..என்னோட நிலைமைல  ... அது தேவை இல்லைதான் .. இருந்தாலும் உடுவோமா ?..தம்ம் கட்டி  பூந்தாச்சு ....Avlodhaan  ராசா நீ Tom & Jerry ல  Tom தோல் உறிஞ்சிட்டு  வெளில   Tom வரா மாதிரி சட்டை கிழிஞ்சி தான் வரப்போறேன்னு நெனச்சேன் .. யாரு  செஞ்ச  புண்ணியமோ  அப்பிடி ஒண்ணும் ஆகல. யூத்  மாதிரி இருந்த சிலதுங்களுக்கு நெஜமாவே அது ஒரு ஆசிட் டெஸ்ட்தான் .பேசாம அங்க ஒரு போர்டு போட்டுருக்கலாம் . ''யூத்  இல்லாம  யூத்  மாதிரி நெனச்சிட்டு  இருக்கற   பெருசுங்க  not alllowed '' ன்னு ........

இது  நடுல  வயிறு செம  கலக்கல்  .. நமக்கு breaking பாயிண்ட்... . டேய்ய் நான் அதுக்கு போகணும் டா .. அவசரம்ன்னு சொன்னா  ... ..... பசங்க  chorus ஆ  நாம falls போறதுக்கு வண்டி ஏறுவோம் மாமா ....அங்க கண்டிப்பா இருக்கும்ன்னு  தைரியம் சொன்னாங்க   ... சரி போலாம் ன்னு சொல்லி போனோம் ஆனா  அங்க மட்டும் இல்லை  அவ்ளோதான்   ......

இந்த tourist spot ஜீப்லாம் வேற 70 - 80  speedல தான் போவானுங்க .. அதுவும் குண்டும் குழியும்னா 100 ல போவானுங்க .... பிரசவமே ஆயிடுமே டா பாவிங்களா  என் அவசரம் எனக்கு  தான் தெரியும்  !!!!!    சரி இன்னிக்கி ஜீப் நாற போகுது ....அதுக்கு நான் பொறுப்பு  இல்லை ...


பசங்க  , சந்தோசமா  மாமா அங்க பாருன்னானுங்க  ... வாவ் ''அது'' அங்க இருந்துது ... ரொம்ப மோசமான விஷயம் என்னன்னா ''அது''க்கு காசு கலெக்ட்  பண்றது தான் .. ஓ பக்கங்கள்ல ஞானி அழகா எழுதிருப்பார் .... "அது" மட்டும் free ஆ இருந்தா நம்ம ஊர் இன்னும் சுத்தமா இருந்திருக்கும்ன்னு..

அதோட கலெக்டர்  ''inka ivvandi ( இன்னும் சில்லறை எடுடான்ற   தொனில ) அப்பிடினான் ... இந்தாடா ன்னு இருந்த எட்டணா , ஒரு ருபாய் எல்லாத்தையும் குடுத்துட்டு ..விட்டா  போதும்னு  உள்ள  போய் கதவ  சாத்திட்டு  உக்காந்தேன் .....Rest is history!!!!-




Coming back to title : We did nt go to Arakku valley at all. It was not fitting in our timeline. so we went to a nearby falls and then it became only a  சரக்கு  valley and not Arakku Valley....

 

2 comments:

Hari said...

அது எப்படி நீங்க கக்கூஸ் போனா மட்டும் இதிஹாசம் நாங்க போனா மட்டும் பூகோலமா

என்னமோ ... ஜீப் நாறாம இருந்ததே .... சந்தோசம் ...

Great Wrtiting... !!!!!

Partha said...

எவ்ளோ நாசுக்கா ''அது '' ன்னு சொல்லி எழுதினா இதிஹாசம் , பூகோலம்ன்னு ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் ..... Anyway thanks for the compliments ...